நான் எனது அலுவலகத்தில் நின்றுகொண்டு ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு தெரிந்த ஒருவர் அந்த வழியாக சென்றார் .அவர் தனது மொபைலில் முருகன் புகைப்படம் வால்பேப்பர் ஆக வைத்திருப்பார். நான் அவரிடம் வள்ளலாரைப் பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.
🗺 Coimbatore - 👀Dreamநான் சித்தி வளாகத்தில் இருந்தேன். என்னிடம் திருவருட்பா புத்தகம் இருந்தது . அதில் புதிதாக பாடல்கள் தோன்றின.அந்த பாடல்கள் மூன்று வரிகள் இருந்தன. அதை நான் நோட் புத்தகத்தில் எழுத முயற்சித்தேன் . எனது நண்பரும் அதை எழுத முயற்சித்தார்.
🗺 Coimbatore - 👀Dreamஉனக்கு சளி தொந்தரவு வராது அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை சொல் என்று குரல் கேட்டது.
🗺 Coimbatore - 👀Dreamவடலூர் ஜோதி தரிசனம் கனவில் தெரிந்தது
🗺 Coimbatore - 👀Dreamஇருட்டு அறையில் ஒளி தெரிந்தது.
🗺 Vellore - 👀Dreamவள்ளலாரின் சிலை மீசை உள்ளது போலும் இல்லாதது போலும் தெரிந்தது.
🗺 Vellore - 👀DreamJul 4 2021 - பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கையில் திருவருட்பா புத்தகமும் இருந்தது. பேருந்தில் இருந்த 2 பேர் என்னை பார்த்தார்கள்.
🗺 Coimbatore - 👀DreamJul 3 2021 - நான் மோட்டார் சைக்கிளில் மதுபான கடைக்கு பயணித்துக்கொண்டிருந்தேன். தவறான வழியில் சென்றதால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கினேன். நான் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் டிவிஎஸ் 50 இல் பெரிய ஹாரன் வைத்துக் கொண்டு வந்தார். என்னை பார்த்தவுடன் ஹாரன் அடித்தார். நான் நிமிர்ந்து பார்த்த உடன் சிறிய தெய்வம் ஆன கருப்புராயன் கையில் கத்தி வைத்து கொண்டு வந்தார். அங்கே நிறைய கத்திகள் விலங்குகளை கொள்ள இருந்தது. அதைப் பார்த்தவுடன் அருட்பெருஞ்ஜோதி என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு பயந்து ஓடி விட்டேன்.
🗺 Coimbatore - 👀DreamJuly 1 2021 - நான் பேருந்தில் மூன்று நபர்களுடன் பயணித்துக் கொண்டிருந்தேன். பேருந்து நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது திருக்கதவம் திறவாயோ என்ற பாடல் கேட்டது மற்றும் அருட்பெருஞ்ஜோதி என்ற வார்த்தை கேட்டது. அதைக் கேட்டவுடன் பேருந்திலிருந்து இறங்கி விட்டு அந்த இடத்தை நோக்கி நடந்தோம். எங்களை நான்கு முதல் ஐந்து நபர்கள் பின் தொடர்ந்தார்கள். அவர்கள் எங்களைப் பார்த்து இவர்கள் புலாலை மறுத்தவர்கள் ஆதலால் பலமாக இருப்பார்கள் என்று கூறினார்கள். திடீரென்று இயேசு நாதர் போற்றி என்ற வாக்கியம்கேட்டது . பின்பு அந்த இடம் தேவாலயம் ஆக மாறிவிட்டது.
🗺 Coimbatore - 👀DreamJune 30 2021 - சமையல் அறையில் என்னுடன் இரண்டு நபர்கள் இருந்தார்கள். அங்கே அமர்ந்திருந்த தமிழாசிரியை எங்களைப் பார்த்து யாருக் கெல்லாம் வள்ளலார் தெரியும் என்று கேட்டார். நான் எனது கையை உயர்த்தினேன். பின்பு வள்ளலார் எழுதிய கடிதம் என்னுடன் இருப்பதை சொல்ல நினைத்தேன். பின்பு அவர் பூக்களை இறைவழிபாடு செய்யக் கொடுத்தார்.
🗺 Coimbatore - 👀DreamJune 25 2021 - நானும் என்னுடன் வேலை செய்பவரும் ஒரு பெட்டிக் கடையில் இருந்தோம் .அது என்னுடைய நண்பனின் பழைய வீடு மாதிரி தோன்றிற்று. அங்கே வள்ளலாரின் உருவப்படம் மறைக்க பட்டிருந்தது. இங்கே இருந்தவர்கள் வள்ளலாரை வழிபட்டுக் கொண்டு இருந்தவர்கள் என்று நான் நினைத்தேன்.
🗺 Coimbatore - 👀DreamJune 20 2021 - நான் ஒரு பாடலைப் படித்து கொண்டு இருந்தேன். அந்த பாடல் திருவருட்பா ஐந்தாம் திருமுறையில் இருந்தது போல தோன்றிற்று.
🗺 Coimbatore - 👀DreamJune 13 2021 - படப்பை பாலகிருஷ்ணன் என்னுடைய நண்பருக்கு வள்ளலார் பிறந்த நாள் அழைப்பிதழை மற்றவர்களுக்கு கொடுக்குமாறு கொடுத்தார்.
🗺 Coimbatore - 👀DreamJune 12 2021 - சத்திய ஞான சபையில் நிறைய மக்கள் திருவருட்பாவை பாடிக் கொண்டிருந்தார்கள். நான் திருவருட்பா புத்தகத்தை எடுத்துக்கொண்டு அருட்பெருஞ்ஜோதி என்று சொல்லிக்கொண்டு ஒரு நபரை பார்த்து ஓடினேன். திருவருட்பா புத்தகத்தால் அந்த நபரை அடிக்க முயற்சித்தேன்.
🗺 Coimbatore - 👀DreamJune 12 2021 - நான் கடையில் இருந்து என் மாமாவிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன்.அவர் ஞானி குருநானக் என்ற புத்தகத்தை என்னை வாங்க சொன்னார். கடைக்காரர் அந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அந்த புத்தகத்தில் கடவுள் வழிபடும் முறை என்று எழுதப்பட்டிருந்தது. நான் வள்ளலாரும் இதைத்தான் சொன்னார் என்று நினைத்தேன். அவர் அந்த புத்தகத்தின் விலை 25 ரூபாய் என்று சொல்லி என்னிடம் 24 ரூபாய் கேட்டார். நான் அவருக்கு நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். அவர் மீதி சில்லரை கொடுத்து விட்டு என்னிடம் நன்றி சொன்னார். கடையின் இடது புறத்தில் வள்ளலாரின் உருவப்படம் இருந்தது .ஆனால் அதில் முகம் இல்லை பின்பு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது .நான் அந்தக் கடையிலிருந்து செல்ல முயலும் போது ஒரு வயதான பாட்டி என்னிடம் வந்து சாப்பிட பணம் கேட்டார் .அந்த பாட்டி ஒரு தங்க நகையை அணிந்து இருந்தாள் அதைப் பார்த்த நான் ஏன் இவருக்கு காசு தர வேண்டும் என்று நினைத்தேன். பின்பு 10 ரூபாய் நாணயத்தை எடுத்து அந்த பாட்டியிடம் கொடுத்தேன் .அதற்கு அந்தப் பாட்டி பத்து ரூபாய் நாணயம் செல்லாது எனக்கு பணமாக கூட நான் வெற்றிலைபாக்கு வாங்க வேண்டும் என்று கேட்டார்.
🗺 Coimbatore - 👀DreamJune 6 2021 - எனது நண்பர் என்னிடம் கன்னிமார் கடவுள் பற்றியும் வள்ளலார் பற்றியும் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் அவளிடம் திருவருட்பா படிக்குமாறு சொன்னேன்.
🗺 Coimbatore - 👀DreamJune 2 2021 - சத்திய ஞானசபை தோன்றிற்று. அங்கே கோழி இறைச்சிகள் இருந்தன. ஸ்டாலின் அரசாங்கம் வடலூரில் மாமிசத்தை தடை செய்ய வேண்டும் என முடிவெடுத்தது.
🗺 Coimbatore - 👀DreamMay 30 2021 - நான் எனது நண்பர் மற்றுமொருவர் சேலம் குப்புசாமி ஐயா வின் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தோம். குப்புசாமி ஐயா எங்களிடம் நீங்கள் யாராவது பிரம்மாவை கனவில் கண்டது உண்டா என்று கேட்டார். அதற்கு நாங்கள் பார்த்துள்ளோம் என்று சொன்னோம். அதற்கு சேலம் குப்புசாமி ஐயா நீங்கள் அனைவரும் அதிஷ்டசாலிகள் இந்த சிறு வயதிலேயே பார்த்துள்ளீர்கள் என்று சொன்னார் .நான் குதம்பை சித்தரையும் கனவில் பார்த்துள்ளேன் என்று சொன்னேன். அதற்கு அவர் வள்ளலாரை கனவில் காண்பது கடினம். ஆனால் நீங்கள் ரோட்டோரம் உள்ள கடைகளுக்கு சென்றால் அங்கே அவரைப் பார்க்கலாம்.அந்த மக்கள் படும் கஷ்டத்தை பார்த்து அதை தீர்க்க அவரே நேரில் சென்று விடுவார் என்று கூறினார்கள்.
🗺 Coimbatore - 👀DreamMay 30 2021 - நான் ஒடிசா மாநிலத்தில் ஒரு விநாயகர் கோவிலில் இருந்தேன். அங்கே இருந்த ஒரு பெண் என்னிடமிருந்த அருட்பெருஞ்ஜோதி அகவல் புத்தகத்தை எடுத்து விட்டு ஓடிவிட்டாள். பின்பு அந்த புத்தகத்தைத் தேடி கண்டுபிடித்து விட்டேன். அந்த புத்தகத்திலிருந்து காகிதங்கள் புதிதாகவும் சிலது பழையதாகவும் இருந்தது. வள்ளலாரின் கையெழுத்தில் எழுதப்பட்ட அகவல் பாடல்கள் அதில் இருந்தது.
🗺 Coimbatore - 👀DreamMay 29 2021 -ஒரு பையன் எனது வீட்டில் இருந்தான். அவனிடம் ஒரு காகிதம் இருந்தது. அந்த காகிதத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்தது போல் இருந்தது. பின்பு அதை நான் பார்த்தேன் அதில் திருவருட்பா பாடல்கள் இருந்தன.
🗺 Coimbatore - 👀Dream