வள்ளலார் ஒருவரின் உடலில் இருந்து அருள்வாக்கு சொல்லிக் கொண்டிருந்தார். எனது தாய் மற்றும் என்னுடைய அக்கா அருகில் அமர்ந்திருந்தார்கள். பின்பு வள்ளளர் அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை என்று ஒரு கருப்பு பேனாவில் எழுதினார். அந்த எழுத்து அருட்பெரும்ஜோதி அகவலில் வள்ளலார் எழுதிய எழுத்துப் போல் இருந்தது. அவர் என்னை வடிவுடை மாணிக்க மாலை படிக்குமாறு சொன்னார். பின்பு ஏதோ சொல்லிவிட்டு.நானும் இந்தப் பையனும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வோம் பின்பு சேர்ந்து கொள்வோம் என்று சொன்னார். எனக்கு அவரை கட்டியணைக்கும் போல் தோன்றியது. பின்பு நான் எனது கனவில் இருந்து எழுந்து விட்டேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)இன்று அதிகாலை 2.30 மணி அளவில் நான் கண்ட காட்சி. ஒருவர் வெள்ளை ஆடையுடன் வந்து என்னுடைய பெயரைச் சொல்லி மூன்று முறை அழைத்தார் அதன் பின்னர் என் அருகில் வந்து பெருவிரலை என் புருவ மத்தியில் வைத்து ஆன்மா மிகத் துடிக்கின்றது என்றார் அதன் பின்னர் வெகு விரைவாக மறைந்தார் அவருடைய முகத்தை அவருடைய பல் வரிசையை வர்ணிப்பதற்கு வார்த்தை கிடையாது அவ்வளவு அவ்வளவு பிரகாசம் உடைய அழகும் நிறைந்த பற்களும் வரிசைப் பற்களும் அவர்களும் உள்முகமாக இருந்தன அந்த காட்சி அற்புதக் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது அந்த காட்சியை வர்ணிக்க வார்த்தை இல்லை அந்த திருமுகத்தை வர்ணிக்க வார்த்தை இல்லை அவர் வள்ளலார் என்று நான் உணர்ந்தேன் இதுவே நான் கண்ட கனவு.
🗺 யாழ்ப்பாணம் - 😴Dream(Sub-conscious)நான் ஒருநாள் வடலூரில் இருந்தேன். பிரார்த்தனை செய்யும் இடத்தில் அருண் என்னும் ஒரு நண்பரை சந்தித்தேன். இருவரும் வாழ்க்கையில் நடந்த பலவற்றைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் பின்பு தங்களின் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். நான் திடீரென்று வள்ளல் பெருமான் வேட்டையபுரம் செல்லும்போது ஒரு குகையில் இருந்த இடத்தைப் பற்றி சொன்னேன். அந்த இடம் விழுப்புரம் பக்கத்தில் உள்ளது. பின்பு அருண் சகோதரர் அவருக்கு ஒரு குகையில் இருந்து தவம் செய்து கொண்டிருப்பது போல் கனவு வந்தது என்று கூறினார். நான் அதை கேட்டவுடன் ஆச்சரியப்பட்டேன். பின்பு நாங்கள் இருவரும் வள்ளல் பெருமான் தவம் செய்த குகைக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்தோம். காலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு நாங்கள் இருவரும் அந்த குகைக்கு சென்றோம். அது இருவருக்கும் நல்ல அனுபவமாக இருந்தது. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.
🗺 Tirunelveli - 😴Dream(Sub-conscious)என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் எனது கனவில் வந்தார். அவரிடம் இந்த சனிக்கிழமை அன்று நான் வடலூர் செல்கின்றேன் தாங்களும் வருகிறீர்களா என்று கேட்டேன். பின்பு அவருக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பற்றி கூறினேன் கனவு கலைந்துவிட்டது. பின்பு நான் அலுவலகத்திற்கு சென்று நான் கனவில் கண்ட நபரிடம் தாங்கள் வடலூர் வருகிறீர்களா என்று நேரில் கேட்டேன். அவர் முதலில் வருவதாக சொன்னார் பின்பு ஏதோ வேறு ஒரு வேலை இருப்பதாக சொல்லி வரவில்லை. பின்பு நான் வடலூர் சென்று அவருக்கு ஆறாம் திருமுறை திருவருட்பா புத்தகத்தை வாங்கிச் சென்று கொடுத்தேன் அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)ஒரு சிறிய தொலைக்காட்சி எனது அலுவலகத்தில் இருந்தது. அதில் சில திருக்குறள் வாக்கியங்கள் இருந்தன. பின்பு நான் அந்த தொலைக்காட்சியில் சாகாதவனே சன்மார்க்கி என்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.நினைத்தவுடன் கனவு கலைந்துவிட்டது.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)எனது கனவில் வள்ளலாரின் புகைப்படம் மற்றும் காரமடை அம்மாவின் புகைப்படம் தெரிந்தது. Note: 1970-2000 இந்த வருடங்களில் வள்ளலார் காரமடை அம்மா என்பவரின் உடலில் இருந்து அருள்வாக்கு சொல்லி கொண்டு இருந்தார். இந்த நிகழ்வு கோவை மாவட்டத்தில் நடந்தது.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)நான் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தேன். அங்கை ஒரு பெண் சிவப்பு நிற புடவை அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்தார். அவர் என்னிடம் உனக்கு ஆன்ம வேண்டுமா என்று கேட்டார். அதற்கு நான் வள்ளலார் உடைய ஆன்ம ஏற்கனவே என்னிடம் இருப்பதாக சொன்னேன். பின்பு நான் அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை என்று அவரை பார்த்து சொன்னேன். அதை கேட்ட உடன் அவர் பயந்து அங்கு இருந்து நகருந்து விட்டார். நான் கனவில் அந்த பெண் மேல்மருவத்தூர் ஆதி பரசக்தி என்று நினைத்தேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)நான் சன்மார்க சங்கத்தில் ஒரு நபருடன் பேசி கொண்டு இருந்தேன். அந்த நபர் என்னிடம் ஒரு கடிதத்தை காமித்தார். அந்த கடிதம் ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதி இருந்தது " நான் மக்கள்ளுக்கு உணவு கொடுத்து சேவை செய்ய வேண்டும் என்று இருந்தது". ஆனால் என் பக்கத்தில் இருந்து ஒரு நபர் , இவர் சன்மார்க சங்கத்தில் தங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதி இருப்பதாக என்னிடம் சொன்னார்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)இது எனது மூன்றாவது கனவு.. பக்கத்து வீட்டு சிறிய பெண் குழந்தைக்கு சரியாக பேச்சுவராது. அந்த குழந்தை என் கனவில் வந்து ஜீவகாருண்யம், ஜீவகாருண்யம் என்று என்னிடம் ஜீவகாருண்யம் செய்ய சொல்கிறது. மேலும் அதே கனவிலே நான் என் தாயிடம் சென்று இந்த குழந்தை இவ்வாறு கூறியது என்று சொன்னேன். அதற்கு என் தாய் "கடவுளை யார் நம்புகிறார்கள் அவர்களுக்கு கடவுள் இவ்வாறு குழந்தை உருவத்தில் வந்து காட்சியளிப்பார்" என்று கூறினார்கள். சிறிது நேரம் கழித்து விழித்து கொண்டேன். மேலும் ஒரு நாள் கனவில் ஒரு கடைக்கு சென்றேன் அங்கு முழுக்க வள்ளலார் படமும் சிலையும் உள்ளதை கண்டேன்.
🗺 Peranamallur, thiruvannamalai district - 😴Dream(Sub-conscious)நான் எனது கனவில் தேன்மொழி என்பவர் இடம் தாங்கள் புருவமத்தியில் எப்பொழுது அருட்பெருஞ்ஜோதியை பார்த்திர்கள் என்று கேட்டேன். அதற்க்கு அவர் எனக்கு நியாபகம் இல்லை என்று சொன்னார் . பின்பு பெருமானார் (வள்ளலார்) சொல்லியது போல் 24*7 புருவமத்தியில் அருட்பெருஞ்ஜோதியை பார்க்க நமது உடலுக்கு ஆற்றல் இல்லை என்று சொன்னார்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)நான் தேர்வு எழுத திருஅருட்பாவை படித்து கொண்டு இருந்தேன். நான்படித்த பாடல்கள் புதிதாக இருந்தது. நான் கனவில் இருந்நு விழித்தவுடன் அந்த திருஅருட்பா பாடல்கள் மறந்துவிட்டன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)நான் ஏற்கனவே எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கு பதிவு செய்துள்ளேன்.இன்று காலை 3.45 மணிக்கு தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தேன். சிறிது நேரம் மகாமந்திரம் சொல்லிட்டு இறைவனை பிரார்த்தனை செய்துவிட்டு படுத்தேன். 5.30 க்கு புருவ மத்தியில் ஒளியை பார்த்தேன் பார்த்தவுடன் உடலில் மின்சாரம் பாய்ந்த அதிர்வு ஏற்பட்டது. என் தலைக்குல் ஒரு குழந்தையின் குரலில் ஒரு பாடல் கேட்டது.. 4 வரிகள் கொண்ட பாடல்.. பாடலின் கடைசியில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அழைக்கிறார் என்று முடிந்தது.. நாக்கில் இனிப்பு சுவையாக இருந்தது..மீண்டும் விழித்துக் கொண்டேன்.
🗺 Peranamallur, thiruvannamalai district - 😴Dream(Sub-conscious)ஒரு நாள் விடியற்காலை 5 மணி இருக்கும். தூக்கம் முழுவதுமாக கலையாமல் அப்படியே கண்களை மூடி படத்துகொண்டு இருந்தேன். திடீரென்று புருவ மத்தியில் ஒரு ஜோதி தோன்றியது அந்த ஜோதியுள் ஜோதி தோன்றியது அதை பார்த்தவுடன் உடல் எல்லாம் வியர்த்து விட்டது. உடல் எல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.. நான் பதறிபோய் எழுந்து விட்டேன்.
🗺 Peranamallur, thiruvannamalai district - 😴Dream(Sub-conscious)யாரோ ஒருவர் எனது கனவில் உனது தாயின் திருமண வீடியோவில் வள்ளலாரை பார்க்கலாம் என்று சொன்னார்கள்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)நானும் என்னுடன் வேலை செய்பவரும் சத்திய ஞான சபை செல்ல வேண்டும் என்று நினைத்தோம். அவர் தவறான பேருந்து நிலையத்தில் நின்று கொண்டதை நான் உணர்ந்தேன் .ஆதலால் நான் எனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவரை எனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி விட்டு அவரை வேறு ஒரு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டேன். பின்பு அங்கிருந்து நான் ஒரு லாரியை பிடித்துக்கொண்டு எனது இருப்பிடத்திற்குச் செல்ல முயற்சித்தேன்.செல்லும் வழியில் இரண்டு காவலர்கள் சோதனை செய்து கொண்டிருந்தார்கள்.அதில் ஒரு காவலர் எனது அப்பா போல் இருந்தார்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)எனது அலுவலகத்தில் வேலைசெய்யும் நபர் கனவில் தோன்றினார்.அவரிடம் நான் சனிக்கிழமை அன்று சத்திய ஞான சபை செல்கின்றேன் தாங்களும் வருகிறீர்களா என்று கேட்டேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)நான் ஒரு சன்மார்க்க சங்கத்தை எனது கனவில் பார்த்தேன் .பின்பு நான் புதிதாக வாங்கிய நிலத்தில் சன்மார்க சங்கம் கட்ட வேண்டும் என நினைத்தேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)எனது புருவ மத்தியில் சிறிதாக ஒளி தோன்றியது .அதை நான் உற்று நோக்கினேன். பின்பு இரண்டு செவிகளும் அடைத்துவிட்டது. அருட்பெருஞ்ஜோதி எப்போது திரும்ப வரப்போகிறார் என்று கேட்டேன் அதற்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை .பின்புதான் உணர்ந்தேன் இது ஒரு கனவென்று.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)நான் எனது கல்லூரி நண்பனின் திருமணத்திற்கு எனது கல்லூரி நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தேன். நாங்கள் ஒரு வீட்டிற்கு தங்கச் சென்றோம் அந்த வீட்டிற்கு செல்லும் பாதையில் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் அந்த பாதை பாதிக்கப்பட்டிருந்தது. பின்பு நான் அந்த வீட்டிலிருந்து கிளம்பி விட்டேன் அந்த வீட்டின் உரிமையாளர் என்னை கூப்பிட்டு நீதான் சாமியாராக போகிறாயா என்று கேட்டார். அதற்கு நான் அமைதியாக நின்றேன். பின்பு அவர் பைபிளிலிருந்து சில பாடல்களை சொன்னார். சொல்லிய பிறகு இயேசுநாதர் விரைவில் வரப்போகிறார் என்று சொன்னார். பின்பு நான் வள்ளலாரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் வரப்போவதை அவரிடம் சொல்லலாமா என்று நினைத்தேன். பின்பு நான் அதை அவரிடம் சொல்லாமல் அமைதியாக நின்றேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)நானும் எனது நண்பரும் ஒரு அறையில் இருந்தோம். அப்போது அவருக்கு வள்ளலார் நாதம் வாசித்துக் கொண்டு நடந்து சென்றவர்களை பின்தொடர்ந்தது போல் காட்சியளித்தார் கனவில். அதைக் கேட்டவுடன் நான் வள்ளலாரின் உருவம் நாம் அறையில் வைத்திருந்த உருவம் போல் இருக்குமோ என்று நினைத்தேன். பின்பு வள்ளலாரின் உருவப்படம் தெரிந்தது.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)