Immortal Ruler Vallalar 🤴 recent message 📟 to souls

👇 Click Below 👇

Posted by adinath, Russia

கீழே உள்ள தகவல் ரஷியன் மொழியில் இணைக்கப்பட்ட வீடியோவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது:வள்ளலார் பற்றிய தகவல்களும், மக்களுக்கு அவர் ஆற்றிய செய்தியும் அடங்கிய காணொளி. இச்செய்தி இராமலிங்க வள்ளலரால் கட்டளையிடப்பட்டு அவர் கனவில் தோன்றிய அவரது பக்தர் ஒருவரால் எழுதப்பட்டது “சர்வவல்லமையுள்ள கடவுளின் ஒளியை நீங்கள் ஆர்வத்துடன் பார்க்க விரும்புகிறீர்கள், அவருடன் நெருங்கி பழகவும், இந்த அனுபவத்தை ஒரு புதிய விளையாட்டாகக் கருதவும் விரும்புகிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கடவுள் தொடர்பான விஷயங்களில் எந்த விளையாட்டையும் விளையாடாதீர்கள் - இது பொறுப்பற்ற தன்மை. இந்த உச்ச ஒளி (Light of Perfection) எந்த ஒளியையும் அல்லது மின்னலையும் விட மில்லியன் மடங்கு வலிமையானது என்பது உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் நெருப்புக்கு பயப்படுகிறீர்கள், ஆனால் கடவுளின் ஒளிக்கு அல்ல, ஆர்வத்துடன் அவரை உங்கள் முன் தோன்றுவதற்கு பொறுப்பற்ற முறையில் விரும்புகிறீர்கள். நீங்கள் தயாராக இல்லாதபோது அவர் உங்கள் முன் தோன்றினால் - உங்கள் மனம் பைத்தியமாகிவிடும், தாங்க முடியாத வலியால் உங்கள் உடல் அதிர்வுறும், நீங்கள் ஊமையாகவும் குருடாகவும் மாறுவீர்கள், யாராலும் உதவ முடியாது என்று நீங்கள் நினைக்கவில்லை. உன் வாழ்நாளின் இறுதி வரை அலையும் பைத்தியக்காரனைப் போல் ஆக்கிவிடும். ஒளியின் உன்னத அருளை வெளிப்படுத்தியவரின் அறிவுரையைக் கேளுங்கள், அவருடன் எப்போதும் ஒன்றாக இணைகிறது. உங்கள் மனதை தயார் செய்யுங்கள்; மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் உங்கள் உடலை தயார் செய்யுங்கள். வெளிப்புறத்தை மட்டுமல்ல, உட்புறத்தையும் தயார் செய்யுங்கள். கொல்லப்பட்ட உயிரினங்களை உண்பதை நிறுத்துங்கள், கெட்ட பழக்கங்களையும் எண்ணங்களையும் அழித்து விடுங்கள், பின்னர் அத்தகைய எளிமையில் என்னிடம் வாருங்கள். ஒளியின் உன்னத அருளைப் பெற நீங்கள் உண்மையிலேயே ஆசைப்பட்டால் அதை உணர உங்கள் தாயும் தந்தையும் உங்களுக்கு உதவுவது போல் நான் இருக்கிறேன். நான் தெய்வீக கிருபையின் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. உங்கள் கவனத்தை என் மீது செலுத்தினால் உங்களால் பார்க்க முடியும், ஏனென்றால் நான் அவருடைய பிரதிபலிப்பு மற்றும் அவரிடமிருந்து வேறுபட்டவன் அல்ல. இருப்பினும், என்னை எப்படிக் கண்டுபிடிப்பது என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள். நான் குறிப்பிட்ட எந்த இடத்திலும் இல்லை; என் தங்குமிடம் முழு பிரபஞ்சம். ஆனால் நீங்கள் என்னை அழைத்தால், நான் உங்களுக்கு நெருக்கமாக இருப்பேன். "அருட் பெரும் ஜோதி" என்ற மந்திரத்துடன் ராமலிங்கா என்று அழைக்கவும், நான் வருவேன்" நீங்கள் என்னைப் பார்க்க முடியாது, என்னைத் தொட முடியாது, ஆனால் உங்கள் நுட்பமான சாரத்தால் நீங்கள் என்னை உணர முடியும், ஏனென்றால் நான் அனைத்து படைப்புகளுடன் ஒன்றிணைந்து தங்கியிருக்கிறேன். உங்கள் அனைவரிடமும். எனவே, படிப்படியாக, என் ஒளி உங்களுக்குள் வெளிப்படுத்தும், இது உச்ச ஒளியின் பிரதிபலிப்பாகும். நீங்கள் ஒரு இருண்ட அறையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால், அறையை விட்டு வெளியேறி சூரியனைப் பார்ப்பது உடனடியாக சாத்தியமில்லை - அதே போல் நீங்கள் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும், உங்கள் மனம், உடல், உணர்வுகளை அருள் ஒளியின் மாற்றத்திற்குத் தயார்படுத்த வேண்டும். ஒளியின் வடிவமாக என்மீது கவனம் செலுத்துவதைத் தொடருங்கள், உன்னதமான கருணையின் ஒளியால் எனக்கு வழங்கப்பட்ட உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையிலான இறுதி ஐக்கியத்தின் சக்தியால் நான் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வேன். என் அன்பான பக்தர்களே, ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்: பூரணத்தின் ஒளி எங்கு போற்றப்படுகிறது - இருளுக்கு சக்தி இல்லை. உங்கள் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது, ஆனால் மாறும். உங்கள் இதயம் முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்கியது மற்றும் கடவுள் இரக்கத்தால் மூழ்கடிக்கப்படுகிறார், மேலும் உங்களில் பலர் புரிந்து கொள்ள மாட்டார்கள், விமர்சிப்பார்கள், உங்களை விட்டு ஓடுவார்கள், உங்களை சுட்டிக்காட்டுவார்கள். அந்த நிமிடத்தில் இருந்து பல விஷயங்கள் மாறும். இது சுதந்திரம் ஆனால் அது துன்பத்தை ஏற்படுத்தும். எனக்காக இதைச் செய்ய நீங்கள் தயாரா? நான் இந்த ஒளியைப் பற்றி ஒரு கவிதை வடிவத்தில் பேசினேன், ஆனால் என் வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை யார் உணர்ந்தார்கள்? அழகான கவிதைகளின் மீது காதல் வயப்பட்டு, வசனத்தின் அழகில் வசப்பட்டு, அர்த்தத்தால் அல்லாமல், அவற்றின் உண்மையான மதிப்பை மறந்துவிட்டனர் பலர். பக்தி என்பது இறுதி வழி, நீங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை என்றால், உன்னத அருளின் ஒளியை நீங்கள் என்றென்றும் மறந்துவிடலாம். கடவுளுக்காக தன்னை தியாகம் செய்ய விரும்பாதவர்களுக்கு இது வராது, எப்போதும் உங்களிடமிருந்து மறைக்கப்படுவார். பழைய வாழ்வு, உலக இன்பங்களை விரும்புபவராக இருந்தால், பரிபூரண ஒளியைப் போற்றி நான் எழுதிய என் கவிதைகளைத் தொடர்ந்து அழகாகப் பாடி, யாத்திரைத் தலங்களில் சுற்றித் திரிந்து, கண்ணீருடன் மந்திரங்களைச் சொல்லி, விடுமுறையைக் கொண்டாடலாம் பூசம் மாதத்தில்.ஆனால் இந்த வழியில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், உன்னத அருளின் ஒளியின் துதியிலிருந்து என் கண்களின் கண்ணீரை உங்களால் பார்க்க முடியாது. என் உண்மையான குழந்தைகள் விளையாடுவதில்லை; இரவும் பகலும் அவர்கள் தங்கள் மனதையும் உடலையும் தெய்வீக மாற்றத்திற்கு தயார் செய்கிறார்கள்; இரவும் பகலும், எங்கும், எந்த இடத்திலும் நான் அவர்களின் இதயங்களில் தங்கியிருக்கிறேன்; அவர்களின் உயிர்-என் மூச்சு, அவர்களின் மனம்-என் மனம், அவர்களின் சொல்-என் சொல். தெய்வீக அருளை வழங்குவதற்கு அவர்கள் தயாராக உள்ளனர். அவர்கள் என் சார்பாகப் பேசத் தகுதியானவர்கள்; அவர்கள் விளையாடுவதில்லை ஆனால் என்னுடைய உண்மையான அறிவை பரப்புகிறார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில்தான் நான் முழுவதுமாக வசிக்கிறேன். அவர்கள் என் உண்மையான மகன்கள் மற்றும் மகள்கள். மீதமுள்ளவர்கள் வெறுமனே பின்பற்றுகிறார்கள். நான் புறப்படுவதற்கு முன், அருள் ஒளியின் சபை கோவிலின் கதவை மூடிவிட்டேன், ஆனால் உண்மையில் எனது கோட்பாட்டை உணர தகுதியான சீடர் கிடைக்கவில்லை. நான் சென்ற பிறகு கோவிலை திறந்தார்கள் ஆனால் அருள் ஒளி இருக்கிறதா? மிக உயர்ந்தவருடன் இணைந்தவரின் எனது சாட்சியங்களை மீறுதல்… அந்த இடங்களில் என் ஆன்மீக குழந்தைகள் இல்லை, அந்த சுவர்கள் காலியாகிவிட்டன, அந்த நிலம் வறண்டு போனது. எனது வசிப்பிடம் எங்கே என் குழந்தைகளின் இதயங்களில் கருணை ஒளியின் அனைத்து உயிரினங்களின் மீதும் அக்கறையும் அக்கறையும் இருக்கிறது, அங்கு எனது படைப்புகள் பொக்கிஷங்களாக மதிக்கப்படுகின்றன, திருமணத்தைப் போல விடுமுறை நாட்களில் பாடுவதில்லை. கேள் என் அன்பே... நான் நிரந்தரமாக இருப்பவன். நான் எப்பொழுதும் பகிர்ந்து கொண்டேன், எதையும் எடுக்காமல் பகிர்ந்து கொண்டேன். ஆனால் என்னைப் பின்பற்றுபவர்கள் எடுத்துக்கொண்டும் எடுத்துக்கொண்டும் இருக்கிறார்கள், பகிர்ந்துகொள்ளவில்லை (கொடுங்கள்). ஆனால் எனது மகன்களும் மகள்களும் எனது அறிவை மட்டுமே பகிர்ந்து (கொடுக்கும்) மற்றும் உண்மையிலேயே பாராட்டும் தருணம் விரைவில் வரும். நான் அனுபவித்த அனைத்தையும் அவர்கள் அனுபவிப்பார்கள், நான் செய்த அனைத்து படிகளையும் அவர்கள் கடந்து செல்வார்கள். அத்தகைய மக்களிடையே, அந்த இடங்களில் நான் வசிக்கிறேன்: அவர்களின் செயல்கள்-என் செயல்கள், அவர்களின் வார்த்தைகள்-என் வார்த்தைகள், அவர்களின் மனம்-என் மனம், அவர்களின் இருப்பு-என் இருப்பு. இது உண்மையில் உண்மை!!! இராமலிங்கரின் செய்தி மகா கருணையின் பிரதிபலிப்பாகும்.

Posted by தேன்மொழி தமிழ்ச்சோலை அம்மா, ஆரணி வள்ளலார் தமிழ்ச்சோலை தருமச்சாலை

வள்ளல் பெருமான் எனக்கு சுத்த தேகத்தில் யோக நித்திரையில் காட்சி கொடுத்த அனுபவங்களை நான் இங்கு பதிவிடுகிறேன் ! நான் சுத்த சன்மார்க்கத்திற்கு வந்த பிறகு வள்ளல் பெருமான் செத்தாரை எழுப்புகின்ற சித்து இருக்கு என்று குறிப்பிடுவதை நான் திருவருட்பாவில் படித்துள்ளேன்.பலமுறை வள்ளல் பெருமானிடம் எனது கணவரை எழுப்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளேன். 2018 யோக நித்திரையில் : நானும் மற்றும் எனது தோழிகளும் ஞான சபையில் வழிபாட்டில் இருந்தோம். திடீரென்று சபைக்குள் ஒரு பாம்பு வருகின்றது.அங்கே இருந்த நபர் பாம்பை பிடித்து அதன் கழுத்தை வெட்டி விடுகிறார். கழுத்தை வெட்டியவுடன் ரத்தம் தெறித்தது. பின்பு ஞான சபை கதவு திறந்து அதிலிருந்து வள்ளல் பெருமான் வெளியே சுத்த தேகத்தில் வந்தார். வள்ளல் பெருமானின் முகம் கவலையாக இருந்தது. பின்பு அவர் என் இடத்திலேயே வந்து ரத்தம் சிந்துகிறீர்களா என்று கேட்டார். பின்பு ஞான சபையை விட்டு வேகமாக வெளியேறினார். அங்கே இருந்தவர்கள் எல்லாம் பிரம்மை பிடித்தது போல் அய்யய்யோ பெருமான் வெளியே செல்கிறாரே என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் வள்ளல் பெருமானார் பின்பு வேகமாக ஓடிச் சென்று ஐயா நில்லுங்கள் எங்களை விட்டுட்டு போயிடாதீங்க நில்லுங்கள் ஐயா நில்லுங்கள் ஐயா என்று கத்திக்கொண்டே ஓடினேன். பெருமான் நிற்காமல் சென்று கொண்டே இருந்தார். அவர் நிற்கவேயில்லை பின்பு நான் என்ன செய்தேன் என்றால் வேகமாக சென்று அவரை மரித்து நின்று கொண்டேன். ஐயா நீங்கள் எங்களை விட்டுச் சென்று விடாதீர்கள். நீங்கள் எங்களை விட்டு செல்வது எங்களுக்கு மிகவும் வருத்தம் என்று நான் அவரிடம் கூறினேன். அதற்குப் பெருமான் இவ்வாறு பதிலளித்தார் " திருந்த மாட்டேங்கிறார்களே நான் எவ்வளவு சொல்லியும் திருந்தவே மாட்டேங்கிறார்களே" என் இடத்திலேயே வந்து ரத்தம் சிந்த வைக்கிறார்களே என்று கேட்டார். அதற்கு நான் திருந்துவாங்க ஐயா நீங்கள் கூட இருந்தால் எல்லாரும் திருந்துவாங்க ஐயா என்று கூறினேன். அதற்குப் பெருமான் சிரித்தார் . வள்ளலாரருக்கும் முகத்தில் இருந்த கவலை மறைந்து விட்டது.பின்பு நான் உடனே எனது கணவரை எழுப்பி கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு பெருமான் தன் தொடையை தட்டி விட்டு எழுப்பிடலாம் என்று கூறினார். அதைக் கேட்டவுடன் நான் மகிழ்ந்தேன். பின்பு பெருமானை பின் தொடர்ந்தேன். பெருமான் ஒரு சத்திரத்திற்குள் சென்றார். நான் அவரிடம் ஐயா இளைப்பாருங்கள் என்று சொன்னேன். விட்டால் பெருமான் அங்கிருந்து சென்று விடுவாரோ என்று நான் அவரை கண்காணித்துக் கொண்டே இருந்தேன். தெருவில் சில மக்கள் நடந்து வருகிறார்கள். அவர்கள் என்னை பார்த்து விட்டு இந்த சத்திரத்தில் யாருமே இருக்க மாட்டார்களே என்று கூறி என்னை நோக்கி வந்தார்கள். அங்கே பெருமானை பார்த்தவுடன் ஐயோ ராமலிங்க சுவாமிகள் வந்துட்டாங்க வந்துட்டாங்க ! ஐயா எங்களை விட்டு விட்டு சென்ற நீங்கள் வந்துட்டீங்களா !வந்துட்டீங்களா ! என்று மகிழ்ச்சியுடன் அங்கு அனைவரும் பெருமானின் காலடியில் விழுந்தார்கள். நான் நினைத்தேன் இவர்களெல்லாம் பெருமான் காலத்து ஆட்கள் போல என்று ! அங்கிருந்த அனைவருக்கும் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்து , ஐயோ ராமலிங்க சுவாமிகள் வந்துட்டாங்களே என்று மகிழ்ச்சியில் இருந்தார்கள்.உடனே யோகநித்திரையும் கலைந்தது.சுத்த தேகத்தில் பெருமான் முகமும், உடலும் ஒளியோடு அப்படி ஒரு தெய்வீகமாக பொலிவதை காணும் பேறு கிடைத்தது வரமாகவே எப்போதும் உணர்கிறேன் ஆன்ம நேய சகோதர சகோதரிகளே.

Posted by Arun Prakash, Coimbatore

அருட்பெருஞ்ஜோத ஆண்டவர் மற்றும் வள்ளலாரின் வருகை குறித்து எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் Dec 12 2021 எனக்கு வந்த கனவு: எனக்கு வேறு ஒரு மாநிலத்தில் வேலை கிடைத்து இருந்தது. அந்த வேலைக்கு நான் சென்றால் அடிக்கடி வடலூர் வரமுடியாது ஆதலால் அந்த வேலைக்கு செல்லலாமா வேண்டாமா என்று நான் அருட்பெருஞ்சோதி ஆண்டவனர பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தேன். ஒருநாள் அவ்வாறு பிரார்த்தனை செய்து கொண்டே தூங்கி விட்டேன். அப்போது இவ்வாறு கனவு வந்தது. நான் ஓரிடத்தில் நின்று கொண்டிருக்கின்றேன் திடீரென்று வெள்ளை நிறத்தில் ஒரு ஜோதி தோன்றியது. நான் அந்த ஜோதியே பார்த்தவுடன் அந்த ஜோதி குல் குதித்துவிட்டேன். அப்போது ஒரு வீடு தோன்றிற்று. அந்த வீட்டில் ஒருவர் உபதேசம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த இடத்தில் நிறைய மனிதர்கள் அமர்ந்து இருந்தார்கள். நான் அங்கு நின்று கொண்டு அவர் சொல்லும் உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.முதலில் அவர் வள்ளலார் கூப்டா தான் வருவாரு இல்லாட்டி வெளியே நின்று வேடிக்கை தான் பார்ப்பார் என்று கூறினார். பின்பு திடீரென்று அவர் கிழக்கு வெளுத்தது அருள்ஜோதி உதயம் என்ற ஒரு பாடலை பாடினார். பின்பு அங்கு இருந்தவர்கள் எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகிறார் ! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகிறார்! என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். எனக்கும் கண்களில் கண்ணீர் வந்தது. பின்பு கனவு கலைந்து எழுந்து விட்டேன். பின்பு நான் திருவருட்பாவில் கனவில் அவர் பாடியவரிகள் இருக்கிறதா என்று பார்த்தேன். என்ன ஒரு அதிசயம் அந்தப்பாடல் திருவருட்பாவில் இருந்தது ! அந்தப் பாடல் வரிகள் "கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம் ! கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம் சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம் மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே."

Posted by I.Pratheesh, Kanyakumari district

December 20 2022: மீண்டும் ஒரு கனவு வந்தது ஆனால் அது வெறும் கனவல்ல...ஆண்டவர் பூமிக்கு வருவதை பற்றிய தகவல்....அதாவது எனக்கு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை ஆண்டவர் பூமிக்கு எந்த தேதியில் வருவார் என்பதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது எனவே இரண்டு நாட்களாக தூங்கச் செல்வதுக்கு முன் இறைவனிடம் நீங்கள் வரும் தேதியை அடியேனுக்கு உணர்த்துங்கள் என்று வேண்டினேன் .மூன்றாவது நாள் கனவில்............. அதற்கான விடை கிடைத்தது......... கனவில் எனக்கு தெரிந்த நபர் ஒருவர் எந்திரங்களுக்கு சக்தியேற்றி தரும் ஒருவரிடம் செல்கிறார்..அந்த நபர் அவரிடம் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தை எந்திரத்தில் ஜெபித்து தருகிறேன்... ஏன்னென்றால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விரைவில் வரப்போகிறார்.. என்று கூறினார்.மேலும் "மகா அவதார் பாபாஜிக்கும்🤘" இந்த உண்மை தெரியும்.என்று கூறினார்...மேலும் நான் அந்த கனவில் என் பாட்டி ஒருவரிடம் பாட்டி அசைவம் உண்பதை நிறுத்தி விடுங்கள். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விரைவில் வரப்போகிறார்... என்று கூறினேன்..அப்படி கூறும் போது என்னுள்ளே ஒரு ஆணித்தரமாக உணர்த்தப்பட்ட ஒன்று..ஆண்டவர் விரைவில் வருகிறார்.. பல வருடங்கள் எல்லாம் ஆகாது..ஆனால் மிக விரைவில் வருகிறார் என்று உணர்த்தப்பட்டது.. மேலும் அந்த உணர்தல் எப்படியிருந்தது என்றால் நமக்கு பிடித்த நபர் யாராவது நாளைக்கு வருகிறார்கள் என்றால் நமக்கு மிகுந்த ஆனந்தமாக இருக்கும் ஆனால் அதே நபர் நம் வீட்டிலிருந்து ஒரு 30 k.m தொலைவில் தான் இருக்கிறார் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்றால் நமக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் அதே போன்ற உணர்வு.. ஆணித்தரமான உணர்வு..இது இறைவன் மற்றும் சித்தர்கள் அடியேனுக்கு உணர்த்தியதாக கருதுகிறேன்.மேலும் ஆண்டவர் வரும்போது முயற்சியில் இருக்கலாம் என்று எண்ணாதீர்கள்...தற்போதே உங்கள் முயற்சியை தொடங்கிவிடுங்கள்.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

Posted by Sangeetha, Coimbatore

Jan 16 2022: நான் எனது நண்பரிடம் கடந்த மூன்று வருடங்களாக தாங்கள் புலால் உண்பதை விடவும் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். வள்ளலார் மற்றும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வருகை காலம் விரைவில் வரப்போகிறது ஆதலால் சன்மார்க்கத்துக்கு வா என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். அவரும் முயற்சி செய்கின்றேன் என்று கூறுவார் ஆனால் புலால் உண்பதை விட்டதில்லை. இவ்வாறு இருக்க இந்த வருடம் அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்த கணவு பின் வருமாறு: அவர் ஓர் அசைவ ஹோட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். பின்பு cashier ரிடம் சென்று பிரியாணிக்கு எத்தனை ரூபாய் என்று கேட்டார். அதற்கு அந்த cashier நீங்கள் எவ்வளவு கூறினாலும் திருந்த மாட்டீர்களா என்று கேட்டார். பின்பு வள்ளலார் 2022 இல் வரப்போகிறார் என்று கூறினார். அதற்கு என் நண்பர் வள்ளலார் 2024 இல் வருவார் என்று எனது நண்பர் சொன்னார் என்று சொல்ல ! அதற்கு அந்த cashier வள்ளலார் புகைப்படம் பொருந்திய ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினார். அந்த புத்தகத்தில் இடது தாள்ளில் சில பாடல் வரிகள் இருந்தன. அந்த பாடல் வரிகளுக்கு கீழ் மிக பெரிய எழுத்தில் 24-12-2022 என்று இருந்தது. பின்பு கனவு கலைந்தது.... இந்த கனவை என் நண்பர் தொலைபேசி இல் அழைத்து சொன்னார். அவருக்கு கனவில் பார்த்த தேதி மட்டும் சரியாக ஞாபகம் இல்லை என்று சொன்னார்.

Posted by Arun Prakash, Coimbatore

Nov 9 2022 அன்று நான் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் வரும் தினத்தை எனக்கு அறிவிக்குமாறு வேண்டிக் கொண்டு. பின்னர் தூங்கிவிட்டேன். பின்பு இதைப் போன்ற கனவு வந்தது. கனவில் பெரியாரின் உருவப்படம் தோன்றியது. பின்னர் ஒருவர் பேசத் தொடங்கினார்." வள்ளலாரை வருவிப்பதற்காக மூன்று மாதங்களாக பூஜை நடந்து கொண்டிருக்கிறது. அது வருகின்ற டிசம்பர் மாதத்துடன் முடிகின்றது. யாரும் வள்ளலாரை திட்டாதிங்க. அவர் சம்பந்தப்பட்டு இருக்கும் சிலைகளையோ அல்லது லிங்கத்தையோ திட்டாதீங்க. வள்ளலார் சாதாரண ஆள் கிடையாது. பின்பு வள்ளலார் கையெழுத்தால் எழுதப்பட்ட ஒரு புத்தகம் தோன்றியது. அதில் அருட்பெருஞ்ஜோதி என்ற எழுத்து மட்டும் எனக்கு ஞாபகம் உள்ளது. பின்னர் சத்திய ஞான சபை தோன்றியது அதன்அருகில் நிறைய சித்தர்கள் அமர்ந்திருந்தார்கள்.

Posted by I.Pratheesh, Kanyakumari district

Novemeber 2022 : நான் கூறுவது சற்று வியப்பாக தான் இருக்கும் ஆனால் என் கனவில் உணர்ந்தப்பட்ட ஒன்று.அதாவது ஒரு நாள் எப்பவும் போல தூங்க சென்றேன் உலக அழிவை பற்றியோ அல்லது ஆன்மீகத்தை பற்றியோ ஆண்டவர் பூமிக்கு வருவதை பற்றியோ எதையும் நினைக்கவில்லை உலகியல் விஷயங்களை பற்றி மட்டும் தான் நினைத்தேன்.. .தூங்கும் முன் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தை கூறி தூங்கினேன்... தூக்கத்தில் கனவு வந்தது..அதில் உலகம் முழுவதும் நிலநடுக்கம்..அதில் பெரும்பாலான பகுதிகள் மண்ணோடு மண்ணாக உள்ளே புதைந்தது..2012 படத்தில் வருவது போல எல்லா வீடுகளும் கட்டிடங்களும் உள்ளே புகுந்தது.பல உயிர்கள் இறந்துவிட்டன.நான் என் பாட்டி வீட்டில் இருந்தேன்...என் பாட்டி வீடு மற்றும் இன்னும் சில வீடுகள் மட்டும் மண்ணில் புதையாமல் இருந்தது..ஆனால் மீண்டும் ஒரு நிலநடுக்கத்தில் வீடு நிலைகுலைந்துவிட்டது..ஆனால் மண்ணுக்குள் புதையவில்லை ஏதோ ஒரு சக்தி புதையாமல் காப்பாற்றுவதை உணர்ந்தேன்.நான் வீட்டின் மாடிக்கு சென்று.. அனைவரிடமும் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தை கூறுங்கள் என்று கத்தி கூறினேன். அந்த சமயத்தில் வானத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ தொடங்கியது..சிகப்பு நிறத்திற்கு வானம் மாறியது ஆனால் அழகான சிகப்பு நிறம்..அந்த சிகப்பு நிற வானில் நட்சத்திரங்கள் பல இருந்தது...சிறிது நேரத்தில் மண்ணோடு மண்ணாய் போன வீடுகள் கட்டிடங்கள் மற்றும் அந்த நிலநடுக்கத்தில் இறந்த மனிதர்கள் என எல்லாம் மீண்டும் மேலே வந்தது... இறந்தவர்கள் எல்லாம் உயிரோடு இருந்தார்கள். வானில் பல உயர்ந்த நிலையில் இருக்கும் சித்தர்கள், ஆன்மாக்கள் இருப்பதை உணர்ந்தேன் ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை.

Posted by Suresh, Chennai

October 13 2022:நான் ஒரு இடத்தில் இருந்தேன் .என்னை கைது செய்ய 4 வெளிநாட்டவர்கள் வந்தார்கள். அவர்களைப் பார்த்து "winter is coming ' என்ற வாக்கியத்தை சொன்னேன். பின்பு அங்கிருந்த அவர்களும் "Yes, The winter is coming" என்ற வாக்கியத்தை கூறி சென்று விட்டார்கள்.

Posted by Kamaraj, Cuddalore

நான்‌‌ தியானம்‌ செய்து கொண்டிருந்தேன் . அப்போது ஒரு விளக்கு தோன்றியது . அந்த ஒளி அந்த இடம் முழுவதும் பரவி . சொல்ல முடியாது படி ஒளி தோன்றியது.பின்பு ஒரு காடு தோன்றியது . அதில் ஒரு வீடு . அதற்கு வெளியே ஒரு மரத்தடியில் நான் அமர்ந்து கொண்டு சிறு கவலையோடு இருந்தேன். அப்போது பேரொளி தோன்றியது அதில் இருந்து வள்ளல் பெருமானார் தோன்றினார்.பின்பு என் அம்மா என்னை அழைத்தாள் தவம் கலைந்தது.வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

Posted by மோகனக்கண்ணன், கோவை

Nov 2022: அன்று அதிகாலை நேரம் 4-5 மணி இருக்கும் தீடிர் என்று கனவில் எங்கும் வெள்ளை ஒளி அதில் வள்ளலார் ஐயாவின் அருட்காட்சி அவர் திரு பாதங்களின் கீழ் மனிதர்கள் வெள்ளை நிற ஒளி வடிவில் எழுந்து கொண்டு இருந்தார்கள் வள்ளலார் அருள் செய்து கொண்டு இருந்தார் பிறகு எனக்கு விழிப்பு வந்து விட்டது. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி . அன்பே சிவம்.நன்றி

Posted by கார்த்தி கேயன், கோவை

Dec 1 2022: என் வீட்டு கயிற்று கட்டிலில் உறங்கிக்கொண்டு இருப்பது போல் கனவு எளிமையான குடிசை வீடு அப்போது இராமலிங்க வள்ளல் பெருமான் குடிசைக்குள் நுழைகிறார். நானோ உறங்கிக்கொண்டு இருக்கிறேன்.அவர் என்னருகே வந்து கட்டிலில் அமர்ந்துகொண்டு என் வலது உள்ளங்கையை பிடித்து அவர் நெஞ்சிடம் வைத்துக்கொண்டு உன்னோடு தான் நான் எப்போதும் இருக்கிறேன் நீ சரியான வழியில் தான் வந்துகொண்டு இருக்கிறாய் இப்படியே இதையே கடைபிடி உன்னை ஓவ்வொரு அணுவாக ஆட்கொண்டு விடுகிறேன் என்கிறார்.

Posted by மணிகண்டன், Kanchipuram

அதிகாலை மணி 3:30 - 4:30 மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்தேன். அந்த இடத்திலே கனவில் நான் வள்ளலாரோடு பேசிக் கொண்டிருக்கிறேன். என் முன்னால் அவர் நிற்க...அவரை பார்த்து நான்.. பெண்களை பார்த்தால் காமம் ஏன் எழுகிறது.... நான் தா எனக்கு காமம் வேண்டாம் சொல்ற ல ....எனக்கு ஏன் இப்படி எண்ணத்த கொடுத்து என்ன சோதிக்கிறீங்க சொல்லி கேட்டேன்.... அன்றிரவே என் கனவில் வந்து.... ஐயா: தம்பி, நீ கேட்ட கேள்வி நியாயம் தான். அதுக்கு நீ உன்னோட பார்வையை மாற்றவேண்டும். நான் : மாற்றனும் நா என்ன பண்ணனும்.....இதுக்கும் ஒரு பாட்டு பாடதீங்க புரியர போல சொல்லுங்க.... ஐயா: (குறுநகையுடன்) நீ உன் எதிரில் வருபவர்களை ஜோதியாக பார்க்க வேண்டும். நான் : ஐயா, உண்மையில் நான் அப்படி பார்க்க தான் நினைக்கிறேன். ஆனால் முடியலயே.. ஐயா: சரி இங்கே வந்து பார் (என்னை வீட்டின் மாடியிலிருந்து பார்க்க சொன்னார்) ஐயா: இப்பொழுது என்ன தெரிகிறது.. எனக்கு எதிர் வீட்டு குழந்தை விளையாடி கொண்டிருந்தால்.. உடனே ஒளி ஆகிவிட்டால்...பக்கத்து வீட்டு அக்கா தெரு விளக்கி கொண்டிருந்தவர் உடனே ஒளியாகி விட்டார்....இப்படியே....தெருவில் வருபவர்கள் போகிறவர்கள்...நாய்கள் எல்லாம் ஜோதியாகி விட்டு அவர்கள் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்கள்..... கண்களில் நீர் வழிய அவரை பார்த்தேன் அவரும் ஜோதியாகவே இருந்தார் அவரை கையெடுத்து கும்பிட்டேன். அவர் தம்பி உனக்கு புரியும் படியாக .... ஆண் உடல் பெண் எல்லாம் எல்லாம் வாகனமே.... Bike ah இருந்தால் ஆண் scooter ஆக இருந்தால் பெண்.... வண்டியை ஓட்டுகிற ஆன்மாவை விட்டுட்டு வண்டியை பார்த்து நீ மயங்கினால் நான் எப்படி பொறுப்பு.... நீ வெளியுலகிற்கு வந்து பார்த்தால் எல்லா வகையான வண்டியையும் எல்லோரும் ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள்.... அதாவது ஆணுக்குள் பெண், பெண்ணுக்குள் ஆண்....இந்த நிலையை அடைந்து கொண்டிருக்கிறார்கள்.....விரைவில் புரிந்து கொண்டு வா.....அருட்பெரும் ஜோதி....அருட்பெரும் ஜோதி.....தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.... என்று சொல்லி கொண்டு மறைந்து விட்டார்....

Posted by Bharathi, Chennai

நான் அக்டோபர் 2022 மாத கடைசியில் ஒரு நாள் வள்ளலாரிடம் , யாரும் கடவுளைப் பற்றி சொன்னால் கேட்க மாட்டேங்கிறாங்க என்று கூறி அழுது கொண்டிருந்தேன்! அன்று இரவு வள்ளலார் எனது கனவில் தோன்றி " நீ போ நான் பார்த்துக் கொள்கிறேன் "என்று பதில் கூறினார். நான் அந்த இடத்தில் வள்ளலாரை உணர்ந்தேன்.

Posted by Bharathi, Chennai

நான் 2022 டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் வள்ளலாரிடம் சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று என்னை வழிநடத்துங்கள் என்று கேட்டேன் . அன்று இரவு வள்ளலார் எனது கனவில் தோன்றி வகுப்பு எடுத்தார் . போர்டில் AXYB என்ற ஆங்கில எழுத்து எழுதி இருந்தது . எனக்கு அது என்னவென்று புரியவில்லை !

Posted by Kabilan , Kanyakumari

24/09/2023 3:00 AM
இன்று அதிகாலை 3.00 மணிக்கு நான் கண்ட கனவு.
ஒரு குடுகுடுப்புக்காரர் அவர் அவரது கையில் இருக்கும் அந்த சிறிய உடுக்கை குலுக்கிக் கொண்டு சொல்கிறார்.
மக்களே எல்லாரும் விழியுங்கள் அருள் பெரும் சோதி ஆண்டவர் வானில் தோன்றுகிறார் என்று உடனே எல்லா மக்களும் ஆகாயத்தை பார்க்கின்றனர். அந்த சோதி வடிவில் பரம்பொருள் எழுந்தருளி காட்சியளிக்கின்றார் .
அந்த மக்களுடன் ஒருவர் நடுத்தர உயரத்துடன் மா நிறத்துடன் ஒருவர் நிற்க்கின்றார். அவர் அதுதான் தூய சோதி வடிவான இறைவன் என்று மக்களிடம் உரைக்கின்றார். உடனே எனக்கும் அந்த அரியக் காட்சி என் புருவ மத்தியில் கிடைத்தது. இறைவன் வரும் தருணம் இது மக்களே விழித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது போல் இருக்கிறது .

Posted by Manigandan , Kanchipuram

08/04/2023
இன்று காலை எனக்கு ஒரு கனவு வந்தது. நான் மருத்துவமனைக்கு ஒரு நபரை பார்க்க செல்கிறேன். மருத்துவமனையின் படிக்கட்டில் கீழே இறங்கி சென்று நான் அந்த நபரை பார்த்து பின்பு மறுபடியும் படிக்கட்டில் ஏறி மேலே வந்தேன். படிக்கட்டில் ஏறி மேலே வந்ததும் ஏதோ ஒரு கோவிலில் இருப்பது போல் உணர்ந்தேன். நான் இடது புறம் திரும்பினேன் அங்கே ஒரு கார் நகர்ந்து கொண்டே இருந்தது . அதைப் பார்த்து ஒருவர் அந்தக் காரை பிடிக்க ஓடி சென்றார். அதற்குள் அந்தக் கார் ஓரிடத்தில் மோதி விட்டது .காரைப் பிடிக்கச் சென்ற இவரும் வழிக்கு சரிவில் விழுந்தார். அந்த இடம் ஒரு மலைப்பகுதி போல இருந்தது. அப்போது அவரைப் பார்த்து நான் சிரித்துக் கொண்டே கேட்கிறேன் "உன்னால் தான் காரை பிடிக்க முடியாது என்று தெரியுமே அப்புறம் ஏன் ஓடிச்சென்றாய், நீ ஓடியது இல்லாமல் கீழே விழுந்து ஒரு செடியை உடைத்தும் விட்டாய் " என்று சொல்லிக் கொண்டு நான் அந்த செடியை பிடுங்கி இன்னொரு இடத்தில் நட செய்தேன். அப்போது திடீரென்று ஒரு நாமம் போட்ட கோவில் தோன்றியது . அங்கே ஒரு பெண் மற்றும் அந்த பெண்ணுடைய தாய் நின்று கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்தப் பெண் என்னைப் பார்த்து சத்திய சன்மார்க்க காலம் இனிதே தொடங்கி விட்டது . நீங்கள் இதற்கு மேலாவது சத்தியவான்களாக இருக்க வேண்டும் என்று அந்தப் பெண் கூறினார். நீங்களா ! நான் மட்டும் தானே இங்கே இருக்கேன் அப்படி என்று சொல்லிக்கொண்டு பின்புறம் திரும்பிப் பார்த்தேன் அங்கே என்னுடைய நண்பர் மற்றும் சிலர் நின்று கொண்டிருந்தார்கள் ஆனால் அவர்களின் முகம் blur ஆக இருந்தது. மேலும் அந்தப் பெண் பின்வருமாறு கூறினார் "அவர் சொன்ன வழியில் நிற்க வேண்டும் , அணு அளவும் அதிலிருந்து விளங்க கூடாது . நீங்கள் தான் வழிநடத்தி செல்ல வேண்டும். இதற்கு அப்புறம் இவர்தான் உங்களை வழிநடத்துவார் அப்படி என்று ஒருத்தரை சொன்னார், அவர் யார் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. அவர் தலைமையில நீங்க வழி நடத்திட்டு போக வேண்டும் என்று அந்தப் பெண் கூறினார். யாருடா இந்த பெண் நம்மகிட்ட இவரு சொல்றாங்களே என்று நினைத்தவுடன் , இந்த பெண்ணுடைய தாய் ஹிந்தியில் ஏதோ கூறினார்கள். அங்கிருந்த ஒருவர் எப்பா அந்தப் பெண் வடமாநிலத்தைச் சார்ந்தவர் அந்தப் பெண்ணுக்கு தமிழே தெரியாது ஆனால் தமிழில் எவ்வாறு பேசுகிறது என்று கேட்டார். மேலும் அந்தப் பெண் ஹிந்தியில் ஆக்ரோஷமாக சில வார்த்தைகளை கூறினார். ஆனால் அது என்னவென்று எனக்கு புரியவில்லை பின்பு கனவு கலைந்து எழுந்து விட்டேன்.

Posted by Arun Prakash , Coimbatore

01/07/2023 6:30 AM
நான் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு மந்திரச் சொல் கேட்டது "ஓம் மகா அவதார் பாபாஜியே நமஹ "என்று. அப்போது நான் நினைத்தேன் மகா அவதார் பாபாஜிக்கு சுத்த சன்மார்க்கத்தை போதிக்க வேண்டும் என்று நினைத்தேன் . பின்பு கனவு கலைந்து எழுந்து விட்டேன் . இந்தக் கனவை சிறிது ஆராய்ந்து பார்த்தால் மகா அவதார் பாபாஜி கிரியா யோக நெறியை பரப்பிக் கொண்டுள்ளார் ஆனால் இதுவோ சுத்த சன்மார்க்கம் காலம். சுத்த சன்மார்க்க நெறியின் படியே ஒருவர் முழுமையான மரணமில்லா பெருவாழ்வை அடைய முடியும் என்று வள்ளலார் நமக்கு கூறியுள்ளார். அதனால்தான் நான் கனவிலும் மகா அவதார் பாபாஜிக்கு சுத்த சன்மார்க்கத்தை போதிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

Posted by Harini, Kanchipuram

01/07/2023 6:30 AM
எனக்கு ஒரு கனவு , அதில் ஒரு அறைக்குள் நான் செல்கிறேன்.. அங்கே இரண்டு பேர் அமர்ந்து பேசுகிறார்கள். அவர்களில் ஒருவர் வள்ளல் பெருமான் . அவர் தரையில் ஒரு மனை போன்ற ஒன்றின் மேல் அமர்ந்து இருக்கிறார் .அவர் இருக்கும் திசை கிழக்கு (say) என்றால் அவர் அருகில் தெற்கு நோக்கி ஒருவர் அமர்ந்து இருக்கிறார். அவர் யோகங்களை பின்பற்றுபவர் போல எனக்கு தோன்றுகிறது.. நான் உள்ளே சென்றதும் வள்ளல் பெருமான் என்னை பார்த்து தண்ணித்தியம் தேவை என்று கூறி விட்டு மீண்டும் அவரிடம் பேச திரும்பி விட்டார். பார்ப்பதற்கு அவரை யோகம் விடுத்து தயவு நெறிக்கு அழைப்பது போல இருந்தது. மேலும் அந்த யோகியை பார்ப்பதற்கு மகா அவதார் பாபாஜி உடன் தொடர்புடையவர் போல் இருந்தது. வள்ளலார் திரும்பிய விதம் எவ்வாறு இருந்தது எனில் "இரு இவனை திருத்தி விட்டு வருகிறேன் என்பது போல் இருந்தது"

Posted by Sujatha M, Villupuram

10/05/2023 3:00 AM
விடியற்காலை 3 மணியில் இருந்து திருட்சபைக் கண் கவனம் வைத்திருந்தோம். முகம் மட்டும் ஒளியாக உள்ளது. வள்ளல் பெருமானுக்கு . வெண்மை நிறமான ஆடை உடுத்தி உள்ளவர்கள். ஆனால், ஒவ்வொரு மனிதர்களின் கைகளைக் கோர்த்து 100-200 நபர்களுடன் வள்ளல் பெருமான் நடந்து வருகிறார்கள் அனைவருமே வள்ளல் பெருமான் போலவே இருக்கிறோம். ஜப்பான், சீனா மக்கள், போல கூட்டம் கூட்டமாக வள்ளல் பெருமான், உடன் இணைந்து அனைத்து மக்களும் ஒன்றாக வருகிறார்கள், போகிறார்கள். திடீர் என்று வானத்தில் ஒளியாக பறக்கிறோம். அனைவருமே. அடுத்த நொடியே மிகச்சிறிய அணுக்கள் கூட்டமாக பயணிக்கிறோம். ஆக, எல்லா மக்களும், வள்ளல் பெருமான் போல முகம் மட்டுமே ஒளியாக பிரகாசிக்கிறது. வெண்மை நிறமான ஆடைகள் அணிந்திருக்கிறோம். கைகள் மட்டும் ஒருவருக்கு ஒருவர் இணைந்து காணப்படுகிறது. எங்கு சென்றாலும், கைகள் மட்டும் பிரியவே இல்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக ஒளியாக , பயணிக்கிறோம். பூமியில் இருந்து வானத்திற்கும். பிறகு புதுப்புது இடங்கள், ஒன்றாக ; இணைந்து செல்கிறோம். ஆனால்.; எதுவுமே பேசவில்லை. இத்தகைய காட்சிகள் பலப்பல தோன்றுகிறது. ஆனால் யாம், வீட்டில் கட்டிலில் படுத்திருப்பதையும், வானத்திலிருந்து அடியால், கண்டோம். பிறகு, எம்முடைய ஒளி மட்டும் கீழே வருகிறது. எம்முடைய உடலில் கலந்து விடுவதை கண்கூடாக! யாம், காண்கிறோம். நேற்று மதியம் தான் யாம், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம்,கேட்டேன். தயவு, கருணை, அருள், அன்பு, புலால் மறுத்தல், ... குணங்களை கடைபிடித்தால், கூட இரண்டு, மூன்று நாட்கள் ஆக, பெருமான் என்னிடம்; எதுவுமே பேசவில்லை. எம்மீது ஏதோ கோபம். அதனால் தான், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். பேசவில்லை என்று நினைத்தேன். ஆனால், இன்று மிகப்பெரிய அற்புதமான காட்சியாக காண..... முடிந்தது. கோடான கோடி நன்றிகள்.உலக மக்களுடன் இணைந்து கரம் பிடித்து வள்ளல் பெருமான், மிகப்பெரிய ......... புதியதாக மக்களை வழிநடத்தி வருகிறார்கள் என்பதை, இதன் மூலம் உணர முடிகிறது.

Posted by Arun Prakash, Coimbatore

16/02/2023 5:29 AM
எனக்கு கனவில் திருவருட்பா புத்தகம் தெரிந்தது , அந்த புத்தகத்தில் வள்ளலார் கையெழுத்தால் எழுதப்பட்ட ஒரு கடிதம் இருந்தது. அதில் அன்புள்ள சுத்த தேக , ஒளி தேக அன்பர்களே என்று எழுதியிருந்தது. அந்த கடிதத்தில் நிறைய எழுத்துக்கள் அளிக்கப்பட்டு இருந்தது அதனால் முழுதாக என்ன எழுதி இருந்தது என்று தெரியவில்லை. உத்தம சிதம்பரத்தில் யாரும் Activate ஆகவில்லை அதனால் வள்ளலார் 2022க்கு அப்புறம் அவரை டைரக்டாக Activate ஆகப் போறார் என்று ஒரு குரல் கேட்டது.
பின்பு அங்கு ஒரு சன்மார்க்கி நின்று கொண்டிருந்தார் , அவரிடம் உங்களுக்கு கலிபுருஷன் யார் என்று தெரியுமா என்று கேட்டேன் . நாங்கள் கலிபுருஷன் யார் என்று கண்டுபிடித்து விட்டோம் என்று கூறினேன். பின்பு அந்த சன்மார்க்கி யார் அந்த கலிபுருஷன் என்று கேட்டார். திடீரென்று பாபா திரைப்படத்தில் நடித்த நம்பியார் அங்கே வந்து யார் அந்தக் கலி புருஷன் என்று கேட்டார். அந்த நம்பியாரை பார்த்ததும் அந்த சன்மார்க்கி என் கையைப் பிடித்து இப்போது கலிபுர்ஷனை பற்றி பேச வேண்டாம் என்று கண்களால் சைகை செய்தார். கலிப்புருஷனை பற்றி எல்லாம் வெளியே சொல்லாதீர்கள் அவன் உங்களை தம்சம் பண்ணிடுவான் என்று ஒரு குரல் கேட்டது. நான் கலிபுர்ஷனைப் பற்றி வெளியே சொல்ல வேண்டும் அப்போதுதான் எல்லாத்துக்கும் உண்மை புரியும் , இல்லையென்றால் அவன் எல்லா ஆவணத்தையும் குழப்பி விடுவான். இவ்வாறு தான் அந்த கடிதத்தில் இருந்த எழுத்துக்களை எல்லாம் அழித்துவிட்டு இருக்கின்றான் என்று சொன்னேன். அந்த சன்மார்க்கி வேற ஒரு டாபிக்கில் டைவர்ட் செய்ய நினைத்தார். பின்பு கனவு கலைந்து விட்டது.

Posted by Arun Prakash, Coimbatore

29/01/2023 - என்னுடைய கனவில் ஒரு காகிதம் தோன்றியது. அதில் வள்ளலார் வர போகிற தினங்கள் இருந்தன. அதில் 4/2 என்ற ஒரு தேதி இருந்தது . பின்பு ஜூன் மாதத்தில் ஒரு தேதி இருந்தது. பின்பு 1900த்தியில் கலியுகம் முடிந்து விட்டது என்று எழுதியிருந்தது.

Posted by Arun Prakash, Coimbatore

30/01/2023 3:28 A.M

நானும் வள்ளலாரும் தர்மச்சாலையில் நின்று கொண்டிருந்தோம்:

நான் : ஏதாச்சு சூப்பர் பவர் இருந்தா குடுங்க !

வள்ளலார் : ஆமா நீயும் கேட்டுட்டே இருக்க !

பின்பு வள்ளலார் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார் நானும் அவருடன் நடந்தேன்

நான் : புதுசா பாட்டு ஏதாவது எழுதி இருந்தீங்கன குடுங்க ?

வள்ளலார் : ஆமா வரவேற்பு மாலை என்ற பாடலை எழுதிட்டு இருக்கேன். அதுல போகர்ல ஆரம்பிச்சு எல்லாத்தையும் பத்தியும் எழுதி இருக்கேன். அது முடிந்து விட்டது என்றால் YouTube full uh release பண்ணிடலாம். Full uh spread Agum !

நாங்கள் இருவரும் நடந்து கொண்டிருந்த பாதையில் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் வள்ளலார் ஏதாச்சும் இருந்தா கொடு என்றார். நான் எனது பாக்கெட்டில் இருந்து 20 ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்

வள்ளலார்: already நானும் என் அக்காவும் அந்தப் பாடல்களை YouTubeயில் ஒருவரிடம் கொடுத்தோம் .ஆனால் அது சரியாக வரவில்லை !

நான்: சாமி , எப்போது ஆண்டவர் வருவாரு ?

வள்ளலார்: இந்த மாசம் வருவாரு

நான்: எப்ப வருவாரு ?

வள்ளலார்: 1:30AM மணிக்கு சிதம்பரம்ல வருவாரு !

இதைக் கேட்டவுடன் கனவு கலைந்து எழுந்து விட்டேன்!

💻 Updated on 24/09/2023

Worried 🤔 how to trust the above Super consious dream 😵‍💫

👇 Click Below 👇

📗ஆறாம் திருமுறை - "திருவருட் பேறு"

கோள் அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும்
கொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
ஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே
அம்பலத்தே நடம்புரியும் 🪔அரும்பெருஞ்சோதியனே🪔
😍தாள் அறிந்தேன் நின்வரவு சத்தியம் சத்தியமே
😍சந்தேகம் இல்லை அந்தத் தனித்ததிரு வரவின்
😍நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது
😍நனவிடையா யினும் அன்றிக் கனவிடையா யினுமே

💻 Updated on 24/09/2023